குறள் 871

பகைத்திறந்தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

pakaiyennum panpi lathanai oruvan
nakaiyaeyum vaendatrpaatrru anru


Shuddhananda Bharati

Appraising enemies

Let not one even as a sport
The ill-natured enmity court.


GU Pope

Knowing the Quality of Hate

For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.

The evil of hatred is not of a nature to be desired by one even in sport.


Mu. Varadarajan

பகை என்று சொல்லப்படும்‌ பண்பு இல்லாத தீமையை ஒருவன்‌ சிரித்துப்‌ பொழுதுபோக்கும்‌ விளையாட்டாகவும்‌ விரும்புதலாகாது.


Parimelalagar

பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று.
விளக்கம்:
(மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)


Manakkudavar

பகைத்திறந்தெரிதலாவது பகையின்கண் செய்யுந் திறமாராய்தல். மேல் பகை கொண்டால் வெல்வாரையுந் தோற்பாரையுங் கூறினார். இனி அப்பகை வர்மாட்டுச் செய்யுந்திற மெண்ணிச் செய்ய வேண்டுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின் கண்ணும் விரும்பற்பாலதன்று,
(என்றவாறு). இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.