குறள் 859

இகல்

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு

ikalkaanaan aakkam varungkaal athanai
mikalkaanum kaedu tharatrku


Shuddhananda Bharati

Hatred

Fortune favours when hate recedes
Hatred exceeding ruin breeds.


GU Pope

Hostility

Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.

At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.


Mu. Varadarajan

ஒருவன்‌ தனக்கு ஆக்கம்‌ வரும்போது இகலைக்‌ கருதமாட்டான்‌; தனக்குக்‌ கேடு தருவித்துக்‌ கொள்ளும்‌ போது அதனை எதிர்த்து வெல்லக்‌ கருதுவான்‌.


Parimelalagar

ஆக்கம் வருங்கால் இகல் காணான்= ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணமுண்டாயினும் இகலை நினையான்; கேடு தரற்கு அதனை மிகல் காணும்= தனக்குக் கேடு செய்துகோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.
விளக்கம்:
இகலான் வரும் கேடு பிறரான் அன்று என்பது தோன்றத் 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை, உண்மைகள் என்பதாம்.


Manakkudavar

(இதன் பொருள்) மாறுபடுதற்குக் காரண முண்டாயினும், ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்; கேடு வருங்காலத்து, அதனை மிகுதலைக் காணும்,
(என்றவாறு). இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.