குறள் 853

இகல்

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்

ikalaennum yevvanoi neekkin thavalillaath
thaavil vilakkam tharum


Shuddhananda Bharati

Hatred

Shun the plague of enmity
And win everlasting glory.


GU Pope

Hostility

If enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won.

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.


Mu. Varadarajan

ஒருவன்‌ இகல்‌ என்று சொல்லப்படும்‌ துன்ப நோயை நீக்கிவிட்டால்‌. அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில்
விளக்கம்:
தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
விளக்கம்:
(தகவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல்
விளக்கம்:
- வெளிப்படை. யாவரும் நண்பராவர்; ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்ற மற்ற ஒளியினைத் தரும்,
(என்றவாறு) இது தோற்றமுண்டா மென்றது.