குறள் 852

இகல்

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

pakalkaruthip patrraa seyinum ikalkaruthi
innaasei yaamai thalai


Shuddhananda Bharati

Hatred

Rouse not hatred and confusion
Though foes provoke disunion


GU Pope

Hostility

Though men disunion plan, and do thee much despite
'Tis best no enmity to plan, nor evil deeds requite.

Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.


Mu. Varadarajan

ஒருவன்‌ தன்னோடு பொருந்தாமல்‌ வேறுபடுதலைக்‌ கருதி அன்பில்லாதவற்றைச்‌ செய்தாலும்‌, தான்‌ இகல்‌ கொண்டு அவனுக்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தல்‌ சிறந்தது.


Parimelalagar

பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்னாசெய்யாமை தலை - அவனொடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.
விளக்கம்:
(செய்யின் பகைமை வளரத் தாம் தாழ்ந்து வரலானும், ஒழியின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகத் தாம் ஓங்கி வரலானும், 'செய்யாமை தலை' என்றார். 'பற்றாத' என்பது விகாரமாயிற்று)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மோடு பற்றில்லாதார் வேறுபடுதலைக் கருதி, இன்னாதவற்றைச் செய்தாராயினும், அவரோடு மாறுபடுதலைக் கருதித் தாமும் அவர்க்கு அவற் றைச் செய்யாமை நன்று,
(என்றவாறு). இது மேற்கூறிய குற்றமும் குணமும் பயக்குமாதலின், மாறுபடுதற்குக் காரணமுள் வழியும் அதனைத் தவிர்த்தல் வேண்டும் என்றது.