குறள் 850

புல்லறிவாண்மை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

ulakaththaar untaenpathu illaenpaan vaiyaththu
alakaiyaa vaikkap padum


Shuddhananda Bharati

Petty conceit

To people's "Yes" who proffer "No"
Deemed as ghouls on earth they go.


GU Pope

Ignorance

Who what the world affirms as false proclaim,
O'er all the earth receive a demon's name.

He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.


Mu. Varadarajan

உலகத்தார்‌ உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன்‌, உலகத்தில்‌ காணப்படும்‌ ஒரு பேயாகக்‌ கருதி விலக்கப்படுவான்‌.


Parimelalagar

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் - உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத் தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்து அலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்; வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.
விளக்கம்:
(கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி 'உண்டு என்பது' என்றும், தானே வேண்டிய கூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல் வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவ தாகிய பேயென்று எண்ணப்படுவன்,
(என்றவாறு). இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றால் புல்லறி வென் றது.