குறள் 849

புல்லறிவாண்மை

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு

kaanaathaan kaatduvaan thaankaanaan kaanaathaan
kantaanaam thaankanda vaaru


Shuddhananda Bharati

Petty conceit

Sans Self-sight in vain one opens Sight
To the blind who bet their sight as right.


GU Pope

Ignorance

That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows.

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself"wise in his own conceit".


Mu. Varadarajan

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான்‌ தானே அறிவில்லாதவனாய்‌ நிற்பான்‌; அறிவு இல்லாதவனோ தான்‌ அறிந்த வகையால்‌ அறிவுள்ளவனாய்த்‌ தோன்றுவான்‌.


Parimelalagar

காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்.
விளக்கம்:
(புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொளுவுதல் ஒருவாற்றானும் இயைவ தன்று என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறியாதானை அறிவிக்கப் புகுத்துமவன் தானறியான்; அவ்வறி யாதவன் தான் அறிந்த படியை அறிந்தானா யிருக்குமாதலான்,
(என்றவாறு). இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.