குறள் 848

புல்லறிவாண்மை

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

yaevavum seikalaan thaanthaeraan avvuyir
poom alavumor noi


Shuddhananda Bharati

Petty conceit

He listens not nor himself knows
Plague is his life until it goes.


GU Pope

Ignorance

Advised, he heeds not; of himself knows nothing wise;
This man's whole life is all one plague until he dies.

The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is aburden (to the earth) till it departs (from the body).


Mu. Varadarajan

தனக்கு நன்மையானவற்றைப்‌ பிறர்‌ ஏவினாலும்‌ செய்யாதவனாய்‌, தானாகவும்‌ உணர்ந்து தெளியாதவனாய்‌ உள்ளவனுடைய உயிர்‌ போகுமளவும்‌ ஒரு நோயாகும்‌.


Parimelalagar

ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் -அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவு ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்.
விளக்கம்:
(உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீக்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும், குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தெளியான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன். இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல் லறி வென்றது.