குறள் 846

புல்லறிவாண்மை

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

atrram maraiththalo pullarivu thamvayin
kutrram maraiyaa vali


Shuddhananda Bharati

Petty conceit

Fools their nakedness conceal
And yet their glaring faults reveal.


GU Pope

Ignorance

Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.

Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).


Mu. Varadarajan

தம்மிடத்தில்‌ உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில்‌ மறைப்பதற்குரிய பகுதியை மட்டும்‌ ஆடையால்‌ மறைத்தல்‌ புல்லறிவாகும்‌.


Parimelalagar

தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம்.
விளக்கம்:
(குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத் து, பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு,
(என்றவாறு). எனவே, அதுவும் மறையானாயின், குற்றநாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறி வென்றது.