குறள் 845

புல்லறிவாண்மை

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்

kallaatha maetrkon dolukal kachadara
vallathooum aiyam tharum


Shuddhananda Bharati

Petty conceit

Feigning knowledge that one has not
Leads to doubt ev'n that he has got.


GU Pope

Ignorance

If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw.

Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.


Mu. Varadarajan

அறிவில்லாதவர்‌ தாம்‌ கல்லாத நூல்களையும்‌ கற்றவர்‌ போல்‌ மேற்கொண்டு நடத்தல்‌, அவர்‌ குற்றமறக்‌ கற்றுவல்ல பொருளைப்‌ பற்றியும்‌ மற்றவர்க்கு ஐயம்‌ உண்டாக்கும்‌.


Parimelalagar

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன் கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும்.
விளக்கம்:
(வல்லது என ஏழாவது இறுதிக்கண் தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ!' என்பது.)


Manakkudavar

(இதன் பொருள்) தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாறாக மேற்கொண் டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும்,
(என்றவாறு). இது கல்லாததனை மேற் கொள்ளுதல் புல்லறி வென்றது.