குறள் 832

பேதைமை

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்

paethaimaiyul yellaam paethaimai kaathanmai
kaiyalla thankat seyal


Shuddhananda Bharati

Folly

Folly of follies is to lead
A lewd and lawless life so bad.


GU Pope

Folly

'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove.

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.


Mu. Varadarajan

ஒருவனுக்குப்‌ பேதைமை எல்லாவற்றிலும்‌ மிக்க பேதைமை, தன்‌ ஒழுக்கத்திற்குப்‌ பொருந்தாததில்‌ தன்‌ விருப்பத்தைச்‌ செலுத்துதலாகும்‌.


Parimelalagar

பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல்.
விளக்கம்:
(இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவாராத பொருளின்கண் காதன்மை செய்தல்,
(என்றவாறு) இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென் றது.