குறள் 827

கூடாநட்பு

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்

solvanakkam onnaarkan kollatrka vilvanakkam
theengku kuriththamai yaan


Shuddhananda Bharati

False friendship

Trust not the humble words of foes
Danger darts from bending bows.


GU Pope

Unreal Friendship

To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near!

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.


Mu. Varadarajan

வில்லின்‌ வணக்கம்‌ வணக்கமாக இருந்தாலும்‌ தீங்கு செய்தலைக்‌ குறித்தமையால்‌, பகைவரிடத்திலும்‌ அவருடைய சொல்லின்‌ வணக்கத்தை நன்மையாகக்‌ கொள்ளக்கூடாது.


Parimelalagar

வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க-பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க.
விளக்கம்:
(தம் வணக்கம் அன்று என்பது தோன்ற 'சொல் வணக்கம்' என்றும், வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லியது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான், ஒன்னாரது குறிப்பும் அவரினானாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தௌ¢யற்க', என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாக, தாழச் சொல்லுஞ் சொல்லைப் பகைவர்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளா தொழிக,
(என்றவாறு). இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது.