குறள் 787

நட்பு

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

alivi navaineekki aaruiththu alivinkan
allal ulappathaam natpu


Shuddhananda Bharati

Friendship

From ruin friendship saves and shares
The load of pain and right path shows.


GU Pope

Friendship

Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps.

(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case ofloss if shares his sorrow (with him).


Mu. Varadarajan

அழிவைத்‌ தரும்‌ தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில்‌ நடக்கச்‌ செய்து, அழிவு வந்த காலத்தில்‌ உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்‌.


Parimelalagar

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின், அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே, ஒருவனுக்கு நட்பாவது.
விளக்கம்:
('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை' என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர்'. அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது விலக்கப்படாமையின், அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே, ஒருவனுக்கு நட்பாவது.
விளக்கம்:
(நாலடி. 301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர் அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு 'யாக்கை அழிவின்கண்' என்றும் உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) நட்டார்க்கு அழிவு வந்தவிடத்து, அவர் துன்பத்தை நீக்கி, நல்ல நெறியின்கண் செலுத்தித் தாங்கி, தன்னால் செயலற்ற விடத்து அவரோடு ஒக்கத் தானும் துன்பம் உழப்பது நட்பு,
(என்றவாறு).