குறள் 774

படைச்செருக்கு

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

kaivael kalitrrodu pokki varupavan
maeivael pariyaa nakum


Shuddhananda Bharati

Military pride

At the tusker he flings his lance
One in body smiles another chance.


GU Pope

Military Spirit

At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast.

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) willpluck the one (that sticks) in his body and laugh (exultingly).


Mu. Varadarajan

கையில்‌ ஏந்திய வேலை ஒரு யானையின்‌ மேல்‌ எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல்‌ தேடி வருகின்றவன்‌ தன்‌ மார்பில்பட்டிருந்த வேலைக்‌ கண்டு பறித்து மகிழ்கின்றான்‌.


Parimelalagar

கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்-கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும்-தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்.
விளக்கம்:
(களிற்றோடு போக்கல்-களிய்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றை யல்லது எறியான் என்பதூஉம், சின மிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. [பு.வெ.மா. தும்பை. 16])


Manakkudavar

(இதன் பொருள்) தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன், தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித் துக் கருவி பெற்றே மென்று மகிழும்,
(என்றவாறு). இது வீரர் செயல் இத்தன்மையதாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும் என்றது.