குறள் 772

படைச்செருக்கு

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

kaana muyalaeitha ampinil yaanai
pilaiththavael yaendhthal inithu


Shuddhananda Bharati

Military pride

To lift a lance that missed a tusker
Is prouder than shaft that hit a hare.


GU Pope

Military Spirit

Who aims at elephant, though dart should fail, has greater praise.
Than he who woodland hare with winged arrow slays.

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in theforest.


Mu. Varadarajan

காட்டில்‌ ஓடும்‌ முயலை நோக்கிக்‌ குறிதவறாமல்‌ எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில்‌ நின்ற யானை மேல்‌ எறிந்து தவறிய வேலை ஏந்துதல்‌ சிறந்தது.


Parimelalagar

கான முயல் எய்த அம்பினில்-கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று
விளக்கம்:
('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்பதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக் குத்தக எறிதலம் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் சொல்லுற்றானது கூற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானை யைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது,
(என்றவாறு). இது மேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.