குறள் 768

படைமாட்சி

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

adalthakaiyum aatrralum illaeninum thaanai
pataiththakaiyaal paadu paerum


Shuddhananda Bharati

The glory of army

Army gains force by grand array
Lacking in stay or dash in fray.


GU Pope

The Excellence of an Army

Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.

Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by thesplendour of its appearance.


Mu. Varadarajan

போர்‌ செய்யும்‌ வீரமும்‌ (எதிர்ப்பைத்‌ தாங்கும்‌) ஆற்றலும்‌ இல்லையானாலும்‌ படை தன்னுடைய அணி வகுப்பால்‌ பெருமை பெறும்‌.


Parimelalagar

தானை-தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும்-பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன் மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப் பொலிவானே பெருமை எய்தும்.
விளக்கம்:
('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு. பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.)


Manakkudavar

(இதன் பொருள்) பகைவரைக் கொல்லுந் தகுதியும், அவர் மேல் வந்தால் பொறுக் கும் ஆற்றலும் இல்லையாயினும், சேனையானது படையழகினால் பெருமை பெறும். படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல். இஃது அர சன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.