குறள் 762

படைமாட்சி

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது

ulaividaththu ooranjsaa vankan tholaividaththuth
tholpataik kallaal arithu


Shuddhananda Bharati

The glory of army

Through shots and wounds brave heroes hold
Quailing not in fall, the field.


GU Pope

The Excellence of an Army

In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.

Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat,fearless of wounds and unmindful of its reduced strength.


Mu. Varadarajan

போரில்‌ அழிவு வந்தவிடத்தில்‌ வலிமை குன்றினாலும்‌ இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப்‌ பெருமை உடைய படைக்கு அல்லாமல்‌ முடியாது.


Parimelalagar

தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண்-தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை, தொல்படைக் கல்லால் அரிது-அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான், அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்-கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க' [பு.வெ.மா.தும்பை.-2] என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.)


Manakkudavar

(இதன் பொருள்) அரசர் கெடுமிடத்து, வழிவந்த படைக்கு அல்லது பிற்படைக்கு போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை ,
(என்றவாறு) வழிவந்த படை - வீரன் மகன் வீரன்.