குறள் 758

பொருள்செயல்வகை

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை

kunraeri yaanaippor kandatrraal thankaiththonru
untaakach seivaan vinai


Shuddhananda Bharati

Way of making wealth

Treasures in hand fulfil all things

Like hill-tuskers the wars of kings.


GU Pope

Way of Accumulating Wealth

As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.

An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.


Mu. Varadarajan

தன்‌ கைப்பொருள்‌ ஒன்று தன்னிடம்‌ இருக்க அதைக்‌ கொண்டு ஒருவன்‌ செயல்‌ செய்தல்‌, மலையின்மேல்‌ ஏறி, யானைப்‌ போரைக்‌ கண்டாற்‌ போன்றது.


Parimelalagar

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.
விளக்கம்:
('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று' என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமது போலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.)


Manakkudavar

இ - ள்.) குன்றின் மேல் ஏறியிருந்து, யானையோடு யானை போர் செய் தலைக் கண்டாற் போலும்; தன் கையகத்து எய்திய பொரு ளுண்டாக ஒரு வினையை யெடுத்துக்கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை,
(என்றவாறு). இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினை செய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.