குறள் 754

பொருள்செயல்வகை

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

araneenum inpamum eenum thiranarindhthu
theethinri vandhtha porul


Shuddhananda Bharati

Way of making wealth

The blameless wealth from fairest means
Brings good virtue and also bliss.


GU Pope

Way of Accumulating Wealth

Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.

The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yieldvirtue and happiness.


Mu. Varadarajan

சேர்க்கும்‌ திறம்‌ அறிந்து தீமை ஒன்றும்‌ இல்லாமல்‌ சேர்க்கப்பட்டு வந்த செல்வத்தின்‌ ஆக்கத்தைப்‌ பெற்று மகிழாமல்‌ அதைத்‌ தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்‌.


Parimelalagar

திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
விளக்கம்:
(செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல்' என்று புகழப்படுதலானும், கடவுட் பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும்' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்; பொருள் வருந் திற மறிந்து, பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்,
(என்றவாறு). இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே; அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடிய பொருளாமாதலின் என்றது.