குறள் 750

அரண்

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்

yenaimaachith thaakiyak kannum vinaimaachi
illaarkan illathu aran


Shuddhananda Bharati

Fortress

But a fort however grand
Is nil if heroes do not stand.


GU Pope

The Fortification

Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.

Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.


Mu. Varadarajan

எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும்‌, செயல்வகையால்‌ சிறப்பு இல்லாதவரிடத்தில்‌ அரண்‌ பயனில்லாததாகும்‌.


Parimelalagar

அரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற் சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாய விடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம்.
விளக்கம்:
(வாளா இருந்தாலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார்' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) சொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும், வினை யின்கண் மாட்சிமை இல்லாதார் மாட்டு அரணாற் பயனில்லை,
(என்றவாறு). இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.