குறள் 747

அரண்

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்

mutrriyum mutrraa thaerindhthum araippaduththum
patrratr kariyathu aran


Shuddhananda Bharati

Fortress

Besieging foes a fort withstands
Darts and mines of treacherous hands.


GU Pope

The Fortification

A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.


Mu. Varadarajan

முற்றுகையிட்டும்‌, முற்றுகையிடாமல்‌ போர்‌ செய்தும்‌, வஞ்சனை செய்தும்‌ எப்படியும்‌ பகைவரால்‌ கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண்‌ ஆகும்‌.


Parimelalagar

முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தௌ¢ந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது.
விளக்கம்:
(இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும் உடைமையானும், ஏனைய நல்லாளுடைமையானும் வாயாவாயின.)


Manakkudavar

(இதன் பொருள்) சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது,
(என்றவாறு).