குறள் 742

அரண்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

manineerum mannum malaiyum aninilatr
kaadum utaiya tharan


Shuddhananda Bharati

Fortress

A crystal fount, a space a mount
Thick woods form a fort paramount.


GU Pope

The Fortification

A fort is that which owns fount of waters crystal clear,
An open space, a hill, and shade of beauteous forest near.

A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.


Mu. Varadarajan

மணிபோல்‌ தெளிந்த நீரும்‌, வெட்ட வெளியான நிலமும்‌, மலையும்‌, அழகிய நிழல்‌ உடைய காடும்‌ ஆகிய இவை நான்கும்‌ உடையதே அரண்‌ ஆகும்‌.


Parimelalagar

மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்புள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது.
விளக்கம்:
(எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலமும் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறு நிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம், (எ-று), தெளிந்த நீர் - பெருநீர் ; இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்ற தனாலே, செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.