குறள் 741

அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்

aatrru pavarkkum aranporul achiththatr
potrru pavarkkum porul


Shuddhananda Bharati

Fortress

The fort is vital for offence
Who fear the foes has its defence.


GU Pope

The Fortification

A fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.

A fort is an object of importance to those who march (against their foes) as well as to those whothrough fear (of pursuers) would seek it for shelter.


Mu. Varadarajan

(படையெடுத்துப்‌) போர்செய்யச்‌ செல்பவர்க்கும்‌ அரண்‌ சிறந்ததாகும்‌; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித்‌ தன்னைப்‌ புகலிடமாக அடைந்தவர்க்கும்‌ அது சிறந்ததாகும்‌.


Parimelalagar

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற்செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித் தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது.
விளக்கம்:
(பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வௌவாமல் வைத்துச் செல்லவேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தால் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் பொற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

அரணாவது அரணிலக்கணங் கூறுதல். மேல் நாட்டிலக்கணங்கூறினார் நகர் இலக்கணங் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம் ; ஆதலால், அதனைச் செய்யவேண்டும்,
(என்றவாறு).