குறள் 736

நாடு

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை

kaedariyaak ketda idaththum valangkunraa
naataenpa naattin thalai


Shuddhananda Bharati

The country

The land of lands no ruin knows
Even in grief its wealth yet grows.


GU Pope

The Land

Chief of all lands is that, where nought disturbs its peace;
Or, if invaders come, still yields its rich increase.

The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (atall), suffers no diminution in its fruitfulness.


Mu. Varadarajan

பகைவரால்‌ கெடுக்கப்படாததாய்‌, கெட்டுவிட்ட காலத்திலும்‌ வளம்‌ குன்றாததாய்‌, உள்ள நாடே நாடுகள்‌ எல்லாவற்றிலும்‌ தலையானது என்று கூறுவர்‌.


Parimelalagar

கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்ட விடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப எல்லா நாட்டினும் தலை என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
('அறியாத, குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை ரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகாரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கெடுதலை யறியா தாய், கெட்டதாயினும் பயன் குன்றாத நாட் டினை எல்லா நாடுகளிலும் தலையான நாடென்று சொல்லுவர்,
(என்றவாறு). இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும், பின் பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.