குறள் 687

தூது

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை

kadanarindhthu kaalang karuthi idanarindhthu
yenni uraippaan thalai


Shuddhananda Bharati

The embassy

Knowing duty time and place
The envoy employs mature phrase.


GU Pope

The Envoy

He is the best who knows what's due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell.

He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes),seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due)consideration.


Mu. Varadarajan

தன்‌ கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச்‌ செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித்‌ தக்க இடத்தையும்‌ அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்‌.


Parimelalagar

கடன் அறிந்து - வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமையறிந்து, காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து, இடன் அறிந்து - சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து; எண்ணி சொல்லுமாற்றை முன்னே விசாரித்து, உரைப்பான் தரை - அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான்.
விளக்கம்:
[செய்யும் முறையாவது; அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்தாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) காரியம் நின்ற முறைமையை யறிர்து. காலத்தையும் நினைத்து, இடமும் அறிந்து, தானேயெண்ணிச் சொல்ல வல்லவன் தலையான தூதனாவான். இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.