குறள் 632

அமைச்சு

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

vankan kutikaaththal katrrarithal aalvinaiyodu
aindhthudan maandathu amaichsu


Shuddhananda Bharati

Ministers

With these he guards people, - by his
Knowledge, firmness and manliness.


GU Pope

The Office of Minister of state

A minister must greatness own of guardian power, determined mind,
Learn'd wisdom, manly effort with the former five combined.

The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,protection of subjects, clearness by learning, and perseverance.


Mu. Varadarajan

அஞ்சாமையும்‌, குடிபிறப்பும்‌, காக்கும்‌ திறனும்‌, கற்றறிந்த அறிவும்‌, முயற்சியும்‌ ஆகிய இவ்வைந்தும்‌ திருந்தப்‌ பெற்றவன்‌ அமைச்சன்‌.


Parimelalagar

வண்கண்-வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடி காத்தல்-குடிகளைக் காத்தலும்; கற்று அறிதல்-நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு-முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு-மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்.
விளக்கம்:
(எண்ணோடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது, அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும், அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும், 'கற்று அறிதல்' என்பதனைக் கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும், 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப..)


Manakkudavar

(இதன் பொருள்) அஞ்சாமையும், குடிகாத்தலும், இந்திரியங்களைக் காத்தலும், நூல் முகத்தானறிதலும், முயற்சியும் என்னும் ஐந்தும் கூட மாட்சிமைப்பட்ட வன் அமைச்சனாவான்,
(என்றவாறு). இவை அமைச்சனாவதன்முன்னே வேண்டுமாதலின், இது முற்கூறப்பட்டது.