குறள் 623

இடுக்கணழியாமை

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

idumpaikku idumpai paduppar idumpaikku
idumpai pataaa thavar


Shuddhananda Bharati

Hope in mishap

Grief they face and put to grief
Who grieve not grief by mind's relief.


GU Pope

Hopefulness in Trouble

Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.


Mu. Varadarajan

துன்பம்‌ வந்தபோது அதற்காக வருந்திக்‌ கலங்காதவர்‌ அந்தத்‌ துன்பத்திற்கே துன்பம்‌ உண்டாக்கி அதை வென்று விடுவர்‌.


Parimelalagar

இடும்பைக்கு இடும்பை படாஅதவர்-வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர்-அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர்.
விளக்கம்:
(வருந்துதல்-இளைத்துவிட நினைத்தல். மனத்திட்பமுடையராய் விடாது முயலவே வினைமுற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம். ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் அதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)


Manakkudavar

(இதன் பொருள்) துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர், (எ - று ) இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப் பட்டன.