குறள் 605

மடியின்மை

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

naeduneer maravi matithuyil naankum
keduneeraar kaamak kalan


Shuddhananda Bharati

Freedom from sloth

To lag, forget, idle and doze
These four are pleasure boats of loss.


GU Pope

Unsluggishness

Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore.

Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desiredby those destined to destruction.


Mu. Varadarajan

காலம்‌ நீட்டித்தல்‌, மறதி, சோம்பல்‌, அளவு மீறிய தூக்கம்‌ ஆகிய இந்‌ நான்கும்‌ கெடுகின்ற இயல்புடையவர்‌ விரும்பி ஏறும்‌ மரக்கலமாம்‌.


Parimelalagar

மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக் கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
விளக்கம்:
(முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது. நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல், இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி, அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்,' என்னும் உவமைக்குறிப்பு 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்த தனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக் கலம்,
(என்றவாறு). காமக்கல் னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போல் வென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.