குறள் 602

மடியின்மை

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

matiyai matiyaa olukal kutiyaik
kutiyaaka vaendu pavar


Shuddhananda Bharati

Freedom from sloth

To make your home an ideal home
Loath sloth as sloth; refuse it room.


GU Pope

Unsluggishness

Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity.

Let those, who desire that their family may be illustrious, put away allidleness from their conduct.


Mu. Varadarajan

தம்‌ குடியைச்‌ சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர்‌ சோம்பலைச்‌ சோம்பலாகக்‌ கொண்டு முயற்சியுடையவராய்‌ நடக்கவேண்டும்‌.


Parimelalagar

குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.
விளக்கம்:
('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக' என்றார் போல, மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும், 'என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) மடி செய்தலை மடித்து ஒழுகுக ; தங்குடியை உயர்குடியாக வேண்டுபவர்,
(என்றவாறு). இது சோம்பாமை வேண்டுமென்றது.