குறள் 6

கடவுள் வாழ்த்து

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

porivaayil aindhthaviththaan poitheer olukka
naerininraar needuvaal vaar


Shuddhananda Bharati

The praise of God

They prosper long who walk His way
Who has the senses signed away.


GU Pope

The Praise of God

Long live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.


Mu. Varadarajan

ஐம்பொறி வாயிலாகப்‌ பிறக்கும்‌ வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில்‌ நின்றவர்‌, நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்‌.


Parimelalagar

பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்; நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
விளக்கம்:
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று.) ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)


Manakkudavar

(இதன் பொருள்) இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்,
(என்றவாறு). பொருளுங் காமமு மாகாவென்றற்கு வேண்டுதல் வேண்டாமை இலான் ' என்று பெயரிட்டார்.