குறள் 590

ஒற்றாடல்

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை

sirappariya otrrinkan seiyatrka seiyin
purappaduththaan aakum marai


Shuddhananda Bharati

Espionage

Give not the spy open reward
It would divulge the secret heard!


GU Pope

Detectives

Reward not trusty spy in others' sight,
Or all the mystery will come to light.

Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.


Mu. Varadarajan

ஒற்றனிடத்தில்‌ செய்யும்‌ சிறப்பைப்‌ பிறர்‌ அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால்‌ மறைப்பொருளைத்‌ தானே வெளிப்படுத்தியவன்‌ ஆவான்‌.


Parimelalagar

ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க-மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும்-செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.
விளக்கம்:
(மறையாவது அவன் ஒற்றனாய தூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால், பிறரறியாமற் செய்க; பிற ரறியச் செய்வானாயின், அவர் ஒற்றி வந்த பொருளைப் புறத்துவிட்டானாம், (எ-று). இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டும் மென்றது.