குறள் 589

ஒற்றாடல்

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

otrraetr runaraamai aalka udanmoovar
sotrrokka thaerap padum


Shuddhananda Bharati

Espionage

Engage the spies alone, apart
When three agree confirm report.


GU Pope

Detectives

One spy must not another see: contrive it so;
And things by three confirmed as truth you know.

Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the informationof three agrees together, let him receive it.


Mu. Varadarajan

ஓர்‌ ஒற்றனை மற்றோர்‌ ஒற்றன்‌ அறியாதபடி ஆளவேண்டும்‌; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர்‌ மூவரின்‌ சொல்‌ ஒத்திருந்தால்‌ அவை உண்மை எனத்‌ தெளியப்படும்‌.


Parimelalagar

ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.
விளக்கம்:
('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக் கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப்படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம் பெற்றாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒற்றரை விடுங்கால், ஒருவரையொருவர் அறியாமல் விடுக; மூவர் சொல் உடன் கூடின், அது தெளியப்படுமாதலால்,
(என்றவாறு). இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.