குறள் 581

ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

otrrum uraisaanra noolum ivaiyirandum
thaetrraenka mannavan kan


Shuddhananda Bharati

Espionage

A king should treat these two as eyes
The code of laws and careful spies.


GU Pope

Detectives

These two: the code renowned and spies,
In these let king confide as eyes.

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.


Mu. Varadarajan

ஒற்றரும்‌ புகழ்‌ அமைந்த நீதிநூலும்‌ ஆகிய இவ்விருவகைக்‌ கருவிகளையும்‌ அரசன்‌ தன்னுடைய கண்களாகத்‌ தெளிய வேண்டும்‌.


Parimelalagar

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்-ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க-அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
விளக்கம்:
(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்து கொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றார்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

ஒற்றாடலாவது ஒற்றரையாளவேண்டு மென்பதும், அவ்வொற்றர் திறனும் கூறுதல். பெரியாரைத் துணைக்கோடல் முதலாகக் கண்ணோட்டம் ஈறாகத் தன் வாசலிலிருந்து செய்ய வேண்டுவன் கூறினார். அது செய்யுங்கால் அவரவர் செய்தியை ஒற்றரான் ஒற்றியறிய வேண்டுதலானும், இனிப் பிறர் நாடு கொள்ளுங் கால் செய்யவேண்டுவன கூறுகின்றாராதலின் அந்நாட்டியல்பறிந்து வினை செய்ய வேண்டுதலானும், இவ்வதிகாரம் வேண்டப்பட்டது. (இதன் பொருள்) ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளிவறிந்த மன்ன வனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக,
(என்றவாறு). அரசர்க்குக் கல்வி இன்றியமையாதது போல ஒற்றும் இன்றியமையாத தென்றவாறு. இஃது ஒற்று வேண்டுமென்றது.