குறள் 573

கண்ணோட்டம்

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்

panyennaam paadatrku iyaipinrael kanyennaam
kannotdam illaatha kan


Shuddhananda Bharati

Benign looks

Of tuneless song what is the use?
Without gracious looks what are eyes?


GU Pope

Benignity

Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?

Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess nokindliness.


Mu. Varadarajan

பாடலோடு பொருந்துதல்‌ இல்லையானால்‌ இசை என்ன பயனுடையதாகும்‌? அதுபோல்‌, கண்ணோட்டம்‌ இல்லாவிட்டால்‌ கண்‌ என்ன பயனுடையதாகும்‌?


Parimelalagar

பண் என்னால் பாடற்கு இயைபு இன்றேல்-பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்! கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-அது போலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.
விளக்கம்:
('பண்' 'கண்' என்பன சாதிப்பெயர். பண்களாவன: பாலைவாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: மாழின்கண் வார்தல் முதலிய எட்டும்; பண்ணல் முதலிய எட்டும்; மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும்; பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்" (திரிகடுகம் 1) என்புழிப்போலக் கொள்க.)


Manakkudavar

(இதன் பொருள்) பண் என்ன பயனுடைத்தாம்; பாடலோடு பொருந்தாதாயின் அதுபோல, கண் என்ன பயனுடைத்தாம்; கண்ணோட்டமில்லாத காலத்து, (எறு). இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.