குறள் 572

கண்ணோட்டம்

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை

kannotdath thullathu ulakiyal akhthilaar
unmai nilakkup porai


Shuddhananda Bharati

Benign looks

World lives by looks of lovely worth
Who lack them are burdens of earth.


GU Pope

Benignity

The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.

The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no(kindliness) is a burden to the earth.


Mu. Varadarajan

கண்ணோட்டத்தினால்‌ உலகியல்‌ நடைபெறுகின்றது; கண்ணோட்டம்‌ இல்லாதவர்‌ உயிரோடு இருந்தால்‌ நிலத்திற்குச்‌ சுமையே தவிர, வேறு பயனில்லை.


Parimelalagar

உலகியல் கண்ணோட்டத்து உள்ளது-உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை-ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாராமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.
விளக்கம்:
(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணது ; ஆதலால், அஃதில் லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம்,
(என்றவாறு). இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.