குறள் 530

சுற்றந்தழால்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்

ulaippirindhthu kaaranaththin vandhthaanai vaendhthan
ilaiththirundhthu yennik kolal


Shuddhananda Bharati

Cherishing kinsmen

Who leaves and returns with motive
The king should test him and receive.


GU Pope

Cherishing one's Kindred

Who causeless went away, then to return, for any cause, ask leave;
The king should sift their motives well, consider, and receive!

When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object(for which he has come back) and thoughtfully receive him again.


Mu. Varadarajan

தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்‌ திரும்பி வந்தவனை, அரசன்‌, அவன்‌ நாடிய உதவியைச்‌ செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்‌.


Parimelalagar

உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை; வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
விளக்கம்:
[வாளா 'உழைப்பிரிந்து' என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து, போய்ப் பகையோடு கூடும் ஆகலின், 'இழைத்திருந்து' என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், 'எண்ணிக் கொளல்' என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்து, பின்பு காரியமானபடி யெண்ணி, அதற்குத் தக்கபடி கூட்டிக்கொள்ளுக,
(என்றவாறு).