குறள் 529

சுற்றந்தழால்

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்

thamaraakik thatrrurandhthaar sutrram amaraamaik
kaaranam inri varum


Shuddhananda Bharati

Cherishing kinsmen

Forsaken friends will come and stay
When cause for discord goes away.


GU Pope

Cherishing one's Kindred

Who once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more.

Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (tohim), when the cause of disagreement is not to be found in him.


Mu. Varadarajan

முன்‌ சுற்றத்தாராக இருந்து பின்‌ ஒரு காரணத்தால்‌ பிரிந்தவரின்‌ உறவு, அவ்வாறு அவர்‌ பொருந்தாமலிருந்த காரணம்‌ நீங்கியபின்‌ தானே வந்து சேரும்‌.


Parimelalagar

தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல்; அமராமைக் காரணம் இன்றி வரும் - அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
விளக்கம்:
['அமராமைக் காரணம் இன்றி' என்றதனான், முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம். அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும்; ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்து கொள்ள வேண்டா; பழைய இயல்பாய் நிற்கும் என்பார், 'வரும்' என்றார்.]


Manakkudavar

(இதன் பொருள்) முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல், அவர் மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும், (எ - று ) இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக்கொள்ளுமாறு கூறிற்று.