குறள் 513

தெரிந்துவினையாடல்

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

anparivu thaetrram avaavinmai indhnaankum
nankutaiyaan kattae thaelivu


Shuddhananda Bharati

Testing and entrusting

Trust him in whom these four you see:
Love, wit, non-craving, clarity.


GU Pope

Selection and Employment

A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.

Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, aclear mind and freedom from covetousness.


Mu. Varadarajan

அன்பு, அறிவு, ஐயமில்லாமல்‌ தெளியும்‌ ஆற்றல்‌, அவா இல்லாமை ஆகிய இந்‌ நான்கு பண்புகளையும்‌ நிலையாக உடையவனைத்‌ தெளியலாம்‌.


Parimelalagar

அன்பு - அரசன் மாட்டு அன்பும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும்; தோற்றம்-அவை செய்தற்கண் கலங்காமையும்; அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய; இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
விளக்கம்:
[இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏது ஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) அன்புடைமையும், அறிவுடைமையும், ஒரு பொருளை ஆராய்ந்து துணிவுடைமையும், அவாவின்மையு மென்னும் இந் நான்கு குணங்களையும் நிலை பெற வுடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு,
(என்றவாறு)