குறள் 512

தெரிந்துவினையாடல்

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

vaari paerukki valampaduththu utrravai
aaraaivaan seika vinai


Shuddhananda Bharati

Testing and entrusting

Let him act who resource swells;
Fosters wealth and prevents ills.


GU Pope

Selection and Employment

Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth andconsiderately prevent the accidents (which would destroy it).


Mu. Varadarajan

பொருள்‌ வரும்‌ வழிகளைப்‌ பெருகச்‌ செய்து, அவற்றால்‌ வளத்தை உண்டாக்கி, வரும்‌ இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல்‌ செய்யவேண்டும்‌.


Parimelalagar

வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து; வளம் படுத்து - அப் பொருளால் செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான் - அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும ஆராய்ந்து நீக்கவல்லவன்; வினை செய்க - அரசனுக்கு வினை செய்க.
விளக்கம்:
[வாயில்களாவன: மேல் இறைமாட்சியுள் ''இயற்றலும்'' (குறள். 385) என்புழி உரைத்தனவும்; உழவு, பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன; ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செல்வார், சுற்றத்தார், பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.]


Manakkudavar

(இதன் பொருள்) பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத் துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக, (எ - று ). பொருள் வருதற்கிடமாவது நில முதலான விடம்; அதனைப் பெருக்குதல் - பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.