குறள் 500

இடனறிதல்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு

kaalaal kalaril nariyadum kannanjsaa
vaelaal mukaththa kaliru


Shuddhananda Bharati

Judging the place

A fox can kill a war tusker
Fearless with feet in deep quagmire.


GU Pope

Knowing the Place

The jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men.

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.


Mu. Varadarajan

வேல்‌ ஏந்திய வீரரைக்‌ கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்‌, கால்‌ ஆழும்‌ சேற்று நிலத்தில்‌ அகப்பட்டபோது நரிகள்‌ கொன்றுவிடும்‌.


Parimelalagar

கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கொத்த கோட்டவுமாய களிறுகளை; கால் ஆழ் களரின் நரி அடும்-அவை கால் ஆழும் இயல் பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும்
விளக்கம்:
['முகம்' ஆகுபெயர். 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்; வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.]


Manakkudavar

(இதன் பொருள்) கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம்,
(என்றவாறு). இது மேலதற்குக் காரணங் கூறிற்று.