குறள் 495

இடனறிதல்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

naedumpunalul vaellum muthalai adumpunalin
neengkin athanaip pira


Shuddhananda Bharati

Judging the place

In water crocodile prevails
In land before others it fails.


GU Pope

Knowing the Place

The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, 'tis slain by anything beside.

In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animalswill conquer it.


Mu. Varadarajan

ஆழமுள்ள நீரில்‌ முதலை மற்ற உயிர்களை வெல்லும்‌; ஆனால்‌ நீரிலிருந்து நீங்கி வந்தால்‌ அந்த முதலையையும்‌ மற்ற உயிர்கள்‌ வென்று விடும்‌.


Parimelalagar

முதலை நெடும்புனலுள் (பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும்; புனலின் நீங்கின் அதனைப் பிற அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.
விளக்கம்:
[எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம்; அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்,' என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடம் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந் நீரினின்று நீங்குமாயின், அதனைப் பிறவெல்லாம் வெல்லும், (எ-று). இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டும் மென்பது கூறின.