குறள் 494

இடனறிதல்

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

yenniyaar yennam ilappar idanarindhthu
thunniyaar thunnich seyin


Shuddhananda Bharati

Judging the place

If fighters fight in vantage field
The plans of foes shall be baffled.


GU Pope

Knowing the Place

The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, willhave to relinquish the thought which they once entertained, of conquering them.


Mu. Varadarajan

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச்‌ செயலை நெருங்கிச்‌ செய்வாராயின்‌, அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர்‌ தம்‌ எண்ணத்தை இழந்துவிடுவார்‌.


Parimelalagar

இடன் அறிந்து துன்னியார் - தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர்; துன்னிச் செயின் - அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.
விளக்கம்:
['அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின், இதனான் அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று, இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தம்மைக் கெடுத்தற்கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின். இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது