குறள் 490

காலமறிதல்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

kokkokka koompum paruvaththu matrrathan
kuththokka seerththa idaththu


Shuddhananda Bharati

Knowing proper time

In waiting time feign peace like stork
In fighting time strike like its peck.


GU Pope

Knowing the fitting Time

As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it,strike, when there is a favourable opportunity.


Mu. Varadarajan

பொறுத்திருக்கும்‌ காலத்தில்‌ கொக்குப்போல்‌ அமைதியா இருக்கவேண்டும்‌; காலம்‌ வாய்த்தபோது அதன்‌ குத்துப்‌ போல்‌ தவறாமல்‌ செய்து முடிக்கவேண்டும்‌.


Parimelalagar

கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.
விளக்கம்:
[மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும் துணையும் முன் அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லது போன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பே விரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்கு உவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அது கூம்புமாறு போலக் கூம்புக'என்றும், 'குத்து ஒக்க' என்றாராயினும் 'அது குத்துமாறு போலக குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம். ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.]


Manakkudavar

(இதன் பொருள்) காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல் ஒடுங்கி இகழ் வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறு போலத் தப்பாமல் விரைந்து செல்க,
(என்றவாறு) இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டு-மென்பதூஉம், காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென் பதூஉம் கூறிற்று.