குறள் 485

காலமறிதல்

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

kaalam karuthi iruppar kalangkaathu
gnyaalam karuthu pavar


Shuddhananda Bharati

Knowing proper time

Who want to win the world sublime
Wait unruffled biding their time.


GU Pope

Knowing the fitting Time

Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.

They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate(the conquest of) the world.


Mu. Varadarajan

உலகத்தைக்‌ கொள்ளக்‌ கருதுகின்றவர்‌ அதைப்பற்றி எண்ணிக்‌ கலங்காமல்‌ அதற்கு ஏற்ற காலத்தைக்‌ கருதிக்‌ கொண்டு பொறுத்திருப்பர்‌.


Parimelalagar

கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர்; காலம் கருதி இருப்பர் - தம் வலி மிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.
விளக்கம்:
[தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், 'இருப்பர்' என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றியிருப்பார்; ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்,
(என்றவாறு).