குறள் 481

காலமறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

pakalvaellum kookaiyaik kaakkai ikalvaellum
vaendhtharkku vaendum poluthu


Shuddhananda Bharati

Knowing proper time

By day the crow defeats the owl
Kings need right time their foes to quell.


GU Pope

Knowing the fitting Time

A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have(a suitable) time.


Mu. Varadarajan

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப்‌ பகலில்‌ வென்றுவிடும்‌; அதுபோல்‌ பகையை வெல்லக்‌ கருதும்‌ அரசர்க்கும்‌ அதற்கு ஏற்ற காலம்‌ வேண்டும்‌


Parimelalagar

கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின் கண் வெல்லாநிற்கும்; இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இல்லை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்னி அமையாது.
விளக்கம்:
[எடுத்துக் காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.]


Manakkudavar

காலமறிதலாவது வினை செய்தற்கு ஆங்காலமறிதல். வலியறிந்தாலும் வினை செய்யுங்காலமும் அறிந்து செய்யவேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்; ஆதலான், மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும். இது காலமறிதல் வேண்டு மென்றது.