குறள் 468

தெரிந்துசெயல்வகை

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

aatrrin varundhthaa varuththam palarninru
potrrinum poththup padum


Shuddhananda Bharati

Deliberation before action

Toil without a plan ahead
Is doomed to fall though supported.


GU Pope

Acting after due Consideration

On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.

The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.


Mu. Varadarajan

தக்கவழியில்‌ செய்யப்படாத முயற்சி பலர்‌ துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும்‌ குறையாகி விடும்‌.


Parimelalagar

ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி; பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.
விளக்கம்:
[முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும்; இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரோடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும்; வேறுபடுத்தலைத் துணைப்படையாளன், தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர் கண்ணும்; ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும்; செய்து, வெல்லுமாற்றான் முயறல், புரைபடுதல்; கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல், உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.]


Manakkudavar

(இதன் பொருள்) மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப் பினும் புரைபடும்,
(என்றவாறு). இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.