குறள் 463

தெரிந்துசெயல்வகை

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்

aakkam karuthi muthalilakkum seivinai
ookkaar arivutai yaar


Shuddhananda Bharati

Deliberation before action

The wise risk not their capital
In doubtful gains and lose their all.


GU Pope

Acting after due Consideration

To risk one's all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain.

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.


Mu. Varadarajan

பின்‌ விளையும்‌ ஊதியத்தைக்‌ கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக்‌ காரணமான செயலை அறிவுடையவர்‌ மேற்கொள்ளமாட்டார்‌.


Parimelalagar

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக் கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை; அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார்.
விளக்கம்:
['கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர் எச்ச வினை கொண்டது. எச்ச-உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார், 'செய்வினை' என்றார்.]


Manakkudavar

(இதன் பொருள்) தமக்கு ஆக்கம் உண்டாக வேண்டி, முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார், (எ - று.) இது விற்பயவாத வினை செய்யலாகாதென்றது.