குறள் 429

அறிவுடைமை

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

yethirathaak kaakkum arivinaark killai
athira varuvathor noi


Shuddhananda Bharati

The possession of knowledge

No frightful evil shocks the wise
Who guard themselves against surprise.


GU Pope

The Possession of Knowledge

The wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free.

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.


Mu. Varadarajan

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக்‌ கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர்‌ நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம்‌ ஒன்றும்‌ இல்லை.


Parimelalagar

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை . அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.
விளக்கம்:
('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம் இன்மை இதனான் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை,
(என்றவாறு) இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின், கடிதாக வாராதென்றது.