குறள் 426

அறிவுடைமை

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு

yevva thuraivathu ulakam ulakaththodu
avva thuraiva tharivu


Shuddhananda Bharati

The possession of knowledge

As moves the world so move the wise
In tune with changing times and ways.


GU Pope

The Possession of Knowledge

As dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well.

To live as the world lives, is wisdom.


Mu. Varadarajan

உலகம்‌ எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில்‌ தானும்‌ அவ்வாறு நடப்பதே அறிவாகும்‌.


Parimelalagar

உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.
விளக்கம்:
('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான், அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) யாதொருவாற்றா லொழுகுவது உலகம் , அதனோடு கூடத் தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது,
(என்றவாறு). அறிவாவது எத்தன்மைத்து என்றார்க்கு , முற்பட்ட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.