குறள் 422

அறிவுடைமை

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

senra idaththaal selavitaa theethoreei
nanrinpaal uippa tharivu


Shuddhananda Bharati

The possession of knowledge

Wisdom checks the straying senses
Expels evils, impels goodness.


GU Pope

The Possession of Knowledge

Wisdom restrains, nor suffers mind to wander where it would;
From every evil calls it back, and guides in way of good.

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this iswisdom.


Mu. Varadarajan

மனத்தைச்‌ சென்ற இடத்தில்‌ செல்லவிடாமல்‌, தீமையானதிலிருந்து நீக்கிக்‌ காத்து நன்மையானதில்‌ செல்லவிடுவதே அறிவாகும்‌.


Parimelalagar

சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின்நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.
விளக்கம்:
(வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும், ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது சொல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக் குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)


Manakkudavar

(இதன் பொருள்) உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமை யை நீக்கி, நன்மைப்பகுதியிலே செலுத்துவது அறிவாவது,
(என்றவாறு). இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.