குறள் 399

கல்வி

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்

thaamin puruvathu ulakin purakkandu
kaamuruvar katrrarindh thaar


Shuddhananda Bharati

Education

The learned foster learning more
On seeing the world enjoy their lore.


GU Pope

Learning

Their joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore.

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves,the world also derives pleasure from it.


Mu. Varadarajan

தாம்‌ இன்புறுவதற்குக்‌ காரணமான கல்வியால்‌ உலகமும்‌ இன்புறுவதைக்‌ கண்டு, கற்றறிந்த அறிஞர்‌ மேன்மேலும்‌ (அக்கல்வியையே, விரும்புவர்‌.


Parimelalagar

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
விளக்கம்:
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும், "யாண்டு பலவாக நரையில் மாயினேம்" (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகையாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறு வாராகக் கண்டால், அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்,
(என்றவாறு) இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின், அது கல்வியானே வருமென்றது.